Skip to content Skip to footer

சிலப்பதிகாரக் காட்சிகள்[5360]

Author     :      விசு. திருநாவுக்கரசு

1949-ம் ஆண்டில் ‘பொன்னி’ இதழில் ‘சிலப்பதிகாரக் காட்சிகள்’ என்னும் தலைப்பில் ‘அறிமுகம்’ என்ற முதல் கட்டுரை வெளியாயிற்று. பின்னர் இருபத்திரண்டு கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. ‘பொன்னியின் ‘ புற அட்டையில் கட்டுரைகளுக் கேற்ற வண்ண ஓவியங்கள் நிலவின. தமிழ்க் காவியத்திலும் கவிதையிலும் மோகம் கொண்ட வாசகர்கள் பலர் கட்டுரைகளைப் படித்துத்தம் அன்பை வடித்துக் கடிதமெழுதி ஊக்கினார்கள். அதன்பின் சென்ற ஆறு ஆண்டுகளாக ஓய்வு கிடைத்ததெல்லாம்.

Accession No       : 5360

Language              : Tamil

Number of pages  : 210

Publishing year     : 1949

Additional information

Categories: , , Tag: Product ID: 23736

Description

சிலப்பதிகாரத்தோடு கொண்ட உறவே இந்நூலாக உருக்கொண்டது. சிலப்பதிகாரத்தின் அருமை அறியாப்பருவத்தே – பள்ளியில் சிறுவனாய்ப் பயின்ற நாளிலே- ஆன்ற புலமை வாய்ந்த பெரியவர் ஒருவர்,தம் பேசிடையே வெளிப்படுத்திய ‘சிலப்பதிகாரம்’ என்ற தொடர் மொழியிலும் அதில் நிரம்பிக் கிடக்கும் ஓசை நயத்திலும் என் உள்ளம் கட்டுண்டது. தோழி சுதமதியிடம் மாதவி கோவலனுற்ற கொடுந்துயர் கூறிய நாளில், அருகிருந்து கேட்ட மணிமேகலை போல் இக்காவியக் கதையைப் பிறரிடம் நான் கேட்ட பொழுதெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறேன். பின்னர் தமிழ்ப் புலமைத் கேர்வின் பொருட்டு நான் பூயின்ற நாளில் இக்காவியத்தை படிக்கும் வாய்ப்பு 1939-ம் ஆண்டு எனக்கு ஏற்படது. அது முதல் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத தின்’ இயல்பைப் பலவாறு உணர்ந்து வருகிறேன்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிலப்பதிகாரக் காட்சிகள்[5360]”

Your email address will not be published. Required fields are marked *