Skip to content Skip to footer

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

திருவள்ளுவர் பிறப்பு வளர்ப்பு முதலியவற்றைப் வற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு பலவாறு பகரப்படுகிறது. இந்நாளில் வழங்கிவரும் அவர்தம் வரலாறுகளெல்லாம் புனைந்துரைகளே. திருவள்ளுவர் தமிழ்நாட்டிற் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகினவர் என்யதும், மக்களை ஈன்றவர் என்பதும், தெய்வப் புலவர் என்தும், அறவோர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன.

Additional information

Author

மு . வரதராசன்

Accession No

18368

Language

Tamil

Number Of Pages

424

Title_transliteration

Tiruvaḷḷuvar allatu vāḻkkai viḷakkam

Publisher

பாரி

Publishing Year

1967

Categories: , Tags: , Product ID: 26338

Description

நாடும் நூலும் திருவள்ளுவர் தமிழ்நாட்டில் தோன்றியவர்; திருக் குறள் என்ற நூலை யாத்தவர். இங்கே அவர் தோன்றிய நாட்டுக்குச் சிறப்பளிப்பதா ? அல்லது அவர் யாத்த நூலுக்குச் சிறப்பளிப்பதா? நூலுக்குச் சிறப்பளிப்பதே சால்பு ஏன்? திருக்குறள் தமிழ்நாட்டுக்கு மட்டும் பயன்படுவதாய் அமையவில்லை. அஃது உலகுக்கும் பயன்டுவதாய் அமைந்துள்ளது. நாட்டினும் உலகம் பெரிதன்றோ?
உலகுக்கென்று ஒரு நூலை அளித்த ஒருவரை ஈன்ற பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இது குறித்துத் தமிழ் மக்கள் இறும்பூதெய்தலாம்; இறுமாப்படையலாம். ஆனால் திருவள்ளுவரைத் தமிழ்நாட்டளவில்கட்டுப்படுத்தலாகாது. அதுதளையாகும்; சிறையாகும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்”

Your email address will not be published. Required fields are marked *