Description
அந்த இசை நாதத்தில் திளைத்த பறவைகள் எல்லாம் அடைந்த இன்பம் எல்லையற்றதாகும். இத்தகைய முன் வரலாறு உடைய இஸ்லாம் இசையை எதிர்ப்பதாகச் சிலர் சொல்வது முற்றிலும் ஆய்வறிவு இல்லாத நிலையையே காட்டுகிறது. இசை என்று சொன்ன மாத்திரத்தில் எடுத்த எடுப்பில் அது கூடாது என்று கூறிவிடுவது சரியன்று. மனிதன் தனது அற்புதமான இன்குரலா லும் மென்குரலாலும் இசைப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை என்பதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
அரபு நாட்டில் வளர்ந்த கலைகளில் கவிதைக் கலையும் இசைக் கலையும் முதன்மையானதாகும், பெருமானார் நபிகள் நாயகமவர் களின் தோற்றத்திற்கு முன்பே நல்ல கவிஞர்கள் அரபு மொழி யில் இசை நலம் மிக்க அரிய பொருள்வளப் பாக்களை வழங்கியுள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.