Description
இஸ்லாமிய இலக்கியம் சம்பந்தமாகப் பல்வேறு தலையாய மொழிகளிலும் உள்ள எண்ணற்ற நூற்களைப்பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டுள்ளனர். அத்தகைய மாபெரும் இலக்கியம் எத்தகையது என்பதை நம்மனோருக்கு எடுத்துக்காட்ட அவாவினேன். மேலும், நமது இளைய சமுதாயத்தினர் – நாளை இந்தச் சமுதாயத்தை நடத்திச்செல்லப் போகிறவர்கள் – பல்வேறு மொழிகளிலு முள்ள இஸ்லாமிய இலக்கியம் பற்றி அறிவதன் மூலம் தமது இலக்கியம் எத்துணை மகத்தானது, எந்த வகையிலெல்லாம் தமது சமயத்தவர் உலகில் அறிவு விளக்கை ஏற்றி வந்துள்ளனர் என்பதை உணர்ந்து தலை நிமிர்ந்து நிற்கவேண்டும், தமது சமயந் தோய்ந்த இலக்கியங்களில் – ஏன், மற்றத்துறைகளிலும் – தாம் தலைகுனியத் தேவையில்லை, பெருமித உணர்வுடன் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்ற உணர்வைப் பெறவேண்டும் என்பதும், இவ்விலக்கியம் பற்றிய நூற்களில் சாத்திய மானவற்றைப் படிக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.