Skip to content Skip to footer

பல்கீஸ் நாச்சியார் காவியம்

Author : கலைமாமணி கவி கா.மு.ஷெரீப்

உலகெலாம் எழுந்துள்ள எல்லா மொழி இலக்கியங்களிலும் காவியம் உயர்ந்த சிறப்புடையது, என்றும் நின்று நிலவுந்தகையது. கற்பவர் இதயங்களைக் கவரும் தன்மையது. தமிழ் இலக்கிய உலகில் காவிய காலம் என்றே ஒரு கால கட்டத்தை வரலாற்றாசிரியர் வரையறுத்து வைத்துள்ளனர்.

Accession no          : 98453

Language               :  Tamil

Number of pages :   80

Year of Publishing  :  1991

Additional information

Categories: , Tag: Product ID: 21653

Description

இளங்கோவைப் போல், திருத்தக்க தேவரைப் போல். கம்பரைப்போல் காவியப் புலவர் தமிழ் மொழிக்கு என்றும் சிறப்புச் செய்து கொண்டிருப்பர். அவர்கள் இறவாப் புகழுடையர். அவர்வழி வந்த புலவர்கள், கவிஞர்கள் பலர். உமறுப்புலவர் ஓர் உயர் புலவர், வீரமாமுனிவர் செந்தமிழ்ச் சிந்தனை சிதறாப் புலவர். இது – இருபதாம் நூற்றாண்டு – காவிய காலமன்று. இருப்பினும் முன்னர்த் தோன்றிய இஸ்லாமியக் காப்பியங்களைப் பதிப்பிக்கின்ற காலம், பாராட்டுகின்ற காலம். இக்காலத்தில் காவியம் படைக்க வேண்டுமென்னும் வேட்கை ஒரு கவிஞர்க்குப் பிறப்பதே சிறப்புக்குரியது. அவர் அதற்குச் செயலாக்கம் கொடுப்பது போற்றுதற் குரியது.அத்தகு சிறப்புக்குரிய போற்றுதற்குரிய – நற்றமிழ்ப் பணியினை நம் கலைமாமணி கவி கா. மு. ஷெரீப் அவர்கள் செய்துள்ளார்கள்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பல்கீஸ் நாச்சியார் காவியம்”

Your email address will not be published. Required fields are marked *