Skip to content Skip to footer

ஹஸ்ரத் ஸெல்மான் பார்ஸி (ரலி)

Author       :      ஸையித் இப்ராஹீம்

இனிப்பையும் இன்பத்தையும் பெற்றார், பால் இருந்த பானையை “பால் பானை” என்பது போலத் தான் நம்மவரில் பலர் பழங்கதைகளைக் கேட்டுத் திருப்தியுறுகின்றனர். நம் முன்னோரின் மெய்யான ஆன்மீக வாழ்க்கையை நாமும் நமது தினசரி வாழ்க்கையில் செயலாற்ற வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

Accession no.        :  6379

Language              :  Tamil

Number of pages :  74

Publishing Year     :  1957

Publisher               :  வளர்மதி பதிப்பகம் 34, இஸ்லாமியாபுரம்.

Additional information

Category: Tags: , , Product ID: 22304

Description

நபி பெருமானாவர்களது முக்கியமான தோழர்களில் ஒருவர் ‘ஹஸ்ரத் ஸல்மான் பார்ஸி (ரலியல்லாஹு அன்ஹு) என்பவர். ஈரானியரில் இவரே முதலாவதாக இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய திருத்தூதருக்கும் பிரியராயிருந்தார். பெருமானாவர்களின் அந்தரங்க நேசராயிருந்தார். ஸஹாபிகள் எனப்படும் நாயக தோழர்களெல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். பெருமானாரவர்கள் காலத்திற்குப் பிறகும் மக்கள் அவரை மதித்தார்கள். இரண்டாம் கலீபா ஹஸ்ரத் உமர் காலத்திலே, ஈரான் நாட்டிலே, ஹஸ்ரத் ஸல்மான், மதாயின் பிரதேச கவர்னராக இருந்தார். இத்தனை சிறப்புகள் இருந்தும் அவர் மிகவும் எளிய வாழ்க்கை நடத்தினார். மக்களிடம் மிகவும் பணிவுடன் நடந்தார். அவரது உடலிலும் உயிரிலும் இஸ்லாம் ஊறி நின்றது. அவர் உண்பதும் இஸ்லாம். உறங்குவதும் இஸ்லாம். எண்ணும் எண்ணமும் இஸ்லாம். இஸ்லாமியப் பணி செய்தே இன்புற்றார். ஏழைகளுக்கு அள்ளிக்கொடுத்து ஏற்றம் பெற்றார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஹஸ்ரத் ஸெல்மான் பார்ஸி (ரலி)”

Your email address will not be published. Required fields are marked *