Skip to content Skip to footer

மொழியின் கதை

தம்பீ ! நீ நாகரிகமான பையன் அல்லவா? எதைப் பார்த்து உன்னை நாகரிகமானவன் என்று சொல்கிறார்கள் தெரியுமா? நீ உடுத்திருக்கும் உடையைப் பார்த்து நாகரிகம் என்று சொல்வதா? அல்லது, உங்கள் வீட்டைப் பார்த்து நாகரிகம் என்று சொல்வதா? நாகரிகத்துக்கு இவைகளும் காரணம் தான். ஆனால், முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது எது என்றால், அதுதான் நீ பேசும் மொழி.

Additional information

Author

மு. வரதராசன்

Accession No

20

Language

Tamil

Number Of Pages

56

Title_transliteration

Moḻiyiṉ katai

Publisher

பாரி நிலையம்

Publishing Year

1951

Gener

Book

Categories: , Tags: , Product ID: 25900

Description

நீ ஒவ்வொரு நாளில் இரவில் கனவு காணும் போது வாயில் ஏதாவது சொல்லிக்கொண்டே தூங்குகிறாய். உனக்கு அப்போது ஒன்றும் தெரியாவிட்டாலும், அம்மாவோ அப்பாவோ அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொழுது விடிந்த பிறகு உன்னைப் பார்த்து, ‘ஏனப்பா ! நீ என்ன கனவு கண்டாய்? இரவெல்லாம் பழனி பழனி என்று வாய் பிதற்றினாயே! யாரோ பழனியைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டாயே !” என்று கேட் கிறார்கள். அப்போதுதான் உனக்கு அது தெரிகிறது. ” இலலை அம்மா ! பழனி என்று பள்ளிக் கூடத்தில் ஒரு பையன் இருக்கிறான். அவன்தான் என் பக்கத்துப் பையன். அவன் கனவில் வந்தான்’ என்று நீ சொல்வாய். இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்முடைய வாழ்க்கையில் மொழி எவ்வளவு வேரூன்றிவிட்டிருக்கிறது என்பது தெரிகிறது. நம்மை மறந்து தூங்கும்போதும் விட முடியாத பழக்கமாக மொழி ஊறிப்போயிருக்கிறது. நன்றாக எண்ணிப்பார். குழந்தையாக இருக்கும் போது மனிதன் முதலில் கற்றுக்கொள்வதும் மொழிதான். தள்ளாத கிழவனான பிறகு மறக்காமலிருப்பதும் மொழிதான்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மொழியின் கதை”

Your email address will not be published. Required fields are marked *