Skip to content Skip to footer

மலைச் சிகரம்

‘நினைக்கும்போது எவ்வளவு பெருமிதமாக இருக் கிறது! எத்தனை பூரிப்பு ஏற்படுகிறது! இப்போதே பறந்து போய் நவீனனுக்கு முன்னால் குதித்தால் எவ்வளவு இன்ப மாக இருக்கும்! மனம் பறக்கிறது. நினைவுகளும் ஆசை களும் பறக்கின்றன. உடம்பு பறக்க முடியுமா?’-நளினியின் மனத்தில் இப்படி எத்தனை எத்தனை அசட்டு நினைவுகள்; ஆசைக்கனவுகள்! மனம் நிறையக் களிப்பும், கைகள் நிறைய ஆர்வத் துடிப்புமாக மேஜைமேல் இறைந்து கிடந்த அந்தப் புத்த கங்களை வாரி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

Additional information

Author

நா. பார்த்தசாரதி

Accession No

46216

Language

Tamil

Number Of pages

90

Title_transliteration

Malaic cikaram

Publisher

தமிழ்ப் புத்தகாலயம்

Publishing Year

1961

Gener

Book

Categories: , Tags: , Product ID: 25713

Description

மனம் நிறையக் களிப்பும், கைகள் நிறைய ஆர்வத் துடிப்புமாக மேஜை மேல் இறைந்து கிடந்த அந்தப் புத்தகங்களை வாரி மார்போடு அணைத்துக் கொண்டாள். அறைக் கதவு மூடியிருந்தது. தன்னை -தன் ஆர்வத்தை யாரும் எங்கிருந்தும் பார்க்கவில்லை என்ற துணிவு, நெஞ்சுக்குள் எல்லையில்லாது பரவும் மணமும் ஒளியும் கொண்டு ஏதோ ஒரு பூப்பூப்பதுபோல் இனம் விளங்காத குறுகுறுப்பு. ‘மகிழ்ச்சிகரமான இந்த உல்லாச நினைவுகளில் மிதந்து கொண்டே இரு’ என்று உள்ளத்தின் அடி மூலையிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறதா? உடம்பில் ஏதோ ஒரு மதமதப்பு. மார்கழி மாதத்து வைகறையில் சுனைத் தண்ணீரில் குளித் தெழுந்த மாதிரி ஒரு புனிதம்; ஒரு சிலிர்ப்பு; ஒரு துடிப்பு. கட்டுக்கு அடங்காத ஆவலுடன் உறையிலிருந்து மறு படியும் நவீனனின் கடிதத்தை எடுத்துப் படித்தாள் நளினி- முத்துமுத்தாய்த் தனித்தனியாய் எழுதப்பட்ட நாலே வரிகள்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “மலைச் சிகரம்”

Your email address will not be published. Required fields are marked *