Skip to content Skip to footer

புலத்துறைமுற்றிய பூவையர்

புலத்துறை முற்றிய பூவையர் என்னும் இச்செம்பொருட்
பைந்தமிழ்ச் சீரிய நூல் உரைநடையானியன்றது. நம் தமிழகத்தின் நல்லிசைப் புலமை மெல்லியலாருள் மூவர் வரலாற்றினை முறையுற நன்கு எடுத்துரைப்பது. யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கி, நாற்பொருட் பயனும் நன்குற அமைந்தது.

Additional information

Author

சிவ. பார்வதியம்மையார்

Accession No

7190

Language

Tamil

Number Of Pages

132

Title_transliteration

Pulattuṟaimuṟṟiya pūvaiyar

Publisher

மகாலிங்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பெற்றது.

Publishing Year

1959

Gener

Book

Categories: , Tags: , Product ID: 26228

Description

காப்பியப் பண்பாகிய பாவிகமுடைத்தாய்ச் சந்தி யென்னும் உறுப்பு விளங்கத்தொடக்கம், இடைநிலைப் பகுதிகள் ஆய ஆக்கம் பெருகி இனிது முடியும் பெற்றியமைந்தது. இந்நூல் அளவிற்சிறியதாகத்தோன்றினும் சொல்லினும், பொருளினும் பெருமைமிக்கது. ஓசையுடைமை, ஆழமுடைத் தாதல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தலாதிய பத்தழகும், நூலமைப்பாகிய புத்தழகும்பெற்றுப் பொலிவதோடு சைவசித்தாந்த உண்மைப் பொருள்களும்கொண்டு மிளிர்வது.
பதினெண் கீழ்க்கணக்கு, தொகை, பாட்டு, பெருங்காப்பிய நூல்களாதிய இலக்கியங்களின் பாடல்களும், பாடற்பகுதி களும், அருஞ்சொற்றொடர்களும், அவ்வாறே தேவாரம், திரு வாசகம் முதலிய திருமுறை, திவ்வியப்பிரபந்தப் பாடல்களும்
ஆங்காங்கு மேம்பட்டு விளங்க,ஐந்திலக்கணக் கருத்துக்களும் உரிய இடங்களில் வெளிப்பட்டும், தொக்கும் திகழ அமைந்த இந்நூலின்மாண்பு, ஆசிரியையவர்களின் இலக்கிய இலக்கண நூல்களில் ஆழ்ந்தகன்ற புலமைத்திறனை நன்கு புலப்படுத்தா நிற்கும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “புலத்துறைமுற்றிய பூவையர்”

Your email address will not be published. Required fields are marked *