Skip to content Skip to footer

நெஞ்சையள்ளும் சீறா

Author     :      ௬. செல்லப்பனார்

சங்க காலத்திற்குப் பின் தமிழில் தோன்றிய இலக்கியங் களில் சமயக் கருத்துக்கள் பெரிதும் இடம் பெறலாயின. தன் சமயக் கருத்தை வலியுறுத்தவும் பிற சமயக் கருத்துக் களை மறுக்கவும் நூல்கள் பல எழுந்தன. இலக்கியப் படைப்புகளில் சமயங்கள் ஆட்சி செலுத்தின. சைவ, வைணவ. பௌத்த, சமண சமயங்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்துள்ள கொடைகளை நாமறிவோம். தேவார திருவாசகங்களைச் சைவமும்; நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை வைணவமும் அளித்துள்ளன. மணிகேலை பௌத்தக் காப்பியமாகப் பெருமை பெறுகிறது.

Accession no           : 81882

Language                :  Tamil

Part                          :   Part 2

Number of pages   :   325

Publisher                 :   சீறாச்செல்வர்,சிலம்பொலி                                                                          சு.செல்லப்பனார்.

Publication             :   1984

Additional information

Categories: , Tag: Product ID: 21839

Description

அருமை நண்பர் மணவை முஸ்தபா சிறந்த தமிழறிஞர். ‘நச்சினார்க்கினியர்’ என நற்றமிழ்ப் புலவர்களால் பாராட்டப்படுபவர். அறிவியல் கருத்துக்கள் தமிழில் பெறவேண்டுமெனும் ஆர்வத் துடிப்பினர், ‘யுனெஸ்கோ கூரியரின்’ தமிழ் இதழ்ப் பதிப்பாசிரியராக இவர் ஆற்றிவரும் தொண்டு அளவிடற்பாலது. உலகை வலம் வந்து அங்குள்ள தமிழ் மக்களோடு கலந்து பழகி அவர்களின் வாழ்க்கை முறைகளை நன்கறிந்தவர். இவர் ‘மீரா அற நிறுவனம்’ எனும் ஓர் அமைப்பைத் தோற்று வித்து நடத்தி வருகிறார். இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் உலகத் தமிழர் அனைவரும் தம் மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றிணைய ஓர் உறவுப் பாலம் அமைய வேண்டுமென்பதேயாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெஞ்சையள்ளும் சீறா”

Your email address will not be published. Required fields are marked *