Skip to content Skip to footer

திருவருட் பாவை

Author                   : இறையடியான் \ கரை

தோற்றத்தால் சிறுத்தும், ஏற்றத்தால் துலங்குவது “பாவை” இலக்கியம், ஆயிரமாயிரம் பாக்களைக் கொண்ட அரும்பெரும் இலக்கியங்கள் அடையாத சிறப்பை இருபது அல்லது முப்பது பாடல்களைக் கொண்ட இவ்வகை இலக்கியங்கள் எய்தியுள்ளன. ஆண்டாளின் “திருப்பாவை”, மாணிக்கவாசகரின்,“திருவெம்பாவை”, “சமணத் திருவெம்பாவை”, கண்ணதாசனின், “தைப்பாவை”, பெருஞ்சித்திரனாரின் “செந்தமிழ்ப் பாவை’ முதலியன பாவை இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கவை.

Accession No       : 46091

Language              : Tamil

Number of pages  : 42

Publishing year     : 1979

Publisher                : வானதி பதிப்பகம், சென்னை

Additional information

Categories: , Tag: Product ID: 23480

Description

எல்லா வகையிலும் ஏற்றங்காட்டிய இசுலாமிய இலக்கியவுலகில் பாவை நூல் இல்லாக்குறை, அடியேனால் ஆக்கப்பட்ட இத்திருப்பாவையால் தீருமென நம்புகின்றேன். இப்மாதங்களில் மாண்புடையபாவை நூல் இசுலாமிய இரமலான் மாதத்தில் மலர்ந்தது. இம்மாதத்தில் இந்நூலின் பாக்களால் இறையுணர்வு மீக்கூரும். இறையின்ப இன்பயன் இனிதோங்கும். இந்நூல் பாத்திமாபதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடு இதனை இயற்றியது மட்டுமே என் வேலை. ஆனால் இதன் உருவாக்க உழைப்பனைத்திற்கும் உரியவர் எல்லா வேலைகளையும் ஏற்றாற்றியவர் என்னரும் தம்பி மு. சாயபு மரைக்காயர் என்பதை ஈண்டுக்குறித்து இன்புறுகின்றேன்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருவருட் பாவை”

Your email address will not be published. Required fields are marked *