Skip to content Skip to footer

குறள் கூறும் இறைமாட்சி

Author      :      தி. முருகரத்தனம்

‘வள்ளுவர் கண்ட அரசியல் · கருத்துக்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றுள்ளும் அரசர் பற்றிய கருத்துக்கள் முதலில் ஒரு நூலாக எழுதப்பட்டன. அவையே குறள் கூறும் இறைமாட்சி என்னும் இந் நூலாகியது. திருக்குறளின் பொருட்பாலில் முதல் இருபத்தைந்து அதிகாரங்கள் ‘அரசியல்’ என ஓரியலாக அமைந்துள்ளன. அவ்வியலில் காணப்படும் கருத்துக்களே இங்கு ஆராய்ச்சிக்கு உரியன வாயின.

Accession No       : 38433

Language              : Tamil

Number of pages  : 166

Publishing year     : 1974

Publisher                :  மதுரைப் பல்கலைக் கழகம், மதுரை – 625021.

Additional information

Categories: , Tag: Product ID: 23795

Description

1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு கருத்தரங்கினை ஓட்டித் தமிழக அரசு மதுரைப் பல்கலைக் கழகத்தில் நிறுவிய அறக்கட்டளையால் தோற்றம் பெற்ற திருக்குறள் ஆய்வுத்துறைக்குத் திருக்குறளின் வாழ்வியற் கருத்துக்கள் ஆராய்ச்சிப் பொருளாக ஒதுக்கப்பட்டன. மக்கள் குடும்பமாகவும் சமூகமாகவும் அரசின் குடிகளாகவும் இயற்கையின் படைப்பாகவும் வாழுகின்றனர். இவ்வனைத் தியல்புகளையுமே வாழ்வியல் எனல் வேண்டும். ஆகவே வள்ளுவர் கூறும் இல்வாழ்வியல், சமூகவியல், அரசியல், பொருளியல், ஒழுக்கவியல், சமயவியல் கருத்துக்களே திருக்குறளின் வாழ்வியற் கருத்துக்கள் ஆகும். மதுரைப் பல்கலைக் கழகத்துத் திருக்குறள் ஆய்வுத் துறையில் இவைபற்றி முறைப்படி ஆராய்ச்சி நடைபெறும். முதன் முதலாக வள்ளுவர் வழங்கிய பொருளியல் ( Economic Ideas of Tiruvalluvar) ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.’ அது குறள் கண்ட பொருள் வாழ்வு என்னும் பெயர் தாங்கி நூலாக வெளிவந்துள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “குறள் கூறும் இறைமாட்சி”

Your email address will not be published. Required fields are marked *