Skip to content Skip to footer

மதுரை சொக்கநாதர் கோவை

Author   :  உரையுடன்

மதுரையின் கண் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணலைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, சொற்பொருட் சுவையும் விழுமிய ஓசை தலமும் வாய்ந்து  மதுரைச் சொக்கநாதர் வருக்கக்கோவை என்னும் இந்நூல் திருப்பனத் தாள் மடவளாகத்து 19ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த திருப்பெருந்திரு சாமிநாதத் தம்பிரான் அடிகளார் அவர்களின் திருவுளப் பாங்கின் வண்ணம், மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பேராசிரியராக விளங்கிய கவிராயர் நல்லசிவனுர் அவர்களால் இயற்றப்பட்டது.

Accession No       : 54610

Language              : Tamil

Number of pages : 84

Published Year      : 1979

Publisher                : திருநெல்வேலி, தென்னிந்திய .

Additional information

Categories: , Tag: Product ID: 22607

Description

தமிழில் விளங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் கோவை என்பதும் ஒன்று. அஃதாவது உருவும் திருவும் பருவமுங்குலனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புடையராகிய தலை மகனுந்தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றிப் பால் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் ‘களவிற் புணர்ந்து இன்பந்துய்த்துப் பின் கற்பு நிலையின் கிழமை பூண்டு, விருந்து புறந்தந்து அருந்தவர்ப் பேணி ஒழுகிவரும் இல்லற இயற்கை நுட்பத்தைப் புனைந்துரை வகையால் எடுத்துரைத்து ஒரு கோவையாக்கிக்கற் போர்க்கும் கேட்வோர்க்கும இன்பம் பயக்கும் துள்ளலோசையான் அமைந்த கட்டளைக் கலித்துறைப் பாக்களால் பாடப் பெறுவதாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மதுரை சொக்கநாதர் கோவை”

Your email address will not be published. Required fields are marked *