Skip to content Skip to footer

உன்னத வாழ்வுக்கு வழிகாட்டி

Author : செந்தமிழ்கிழார்

பழக்க தோஷம் என்று சொல்வார்களே அது கவிதைக்குக் கூட உண்டு போலும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டு வரை கவிஞனாக இருந்த தான், பத்திரிகையில் கோர்ட் விவகாரங்களை எழுதியதற்காக அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் என் மீது வழக்கு துவங்கியதோடு அல்லாமல், எனக்காக சட்ட உதவி செய்யயாரும் மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் கவிதை எழுதுவதையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு சட்டப்புத்தகங்களைப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

Accession No       : 102606

Language              : Tamil

Number of pages : 166

Publishing year     : 2001

Publisher               : புதுமலர் புத்தகாலயம்

Additional information

Categories: , Tag: Product ID: 24201

Description

சென்னையில் பஸ் பிரயாணம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆனால் அதிலும் ஒரு வாய்ப்பு. அந்தப் பிரயாணத்தில் படிக்க வாய்ப்பில்லை என்றாலும் எதையாவது சிந்திக்கலாம். அதனால் அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ளதாகப் போக்குவது என்று யோசித்தபோது, கவிதை எழுதுவதைத் தவிர வேறுவழியில்லை என்று முடிவுக்கு வந்தேன். கவிதை எழுதும் பழக்கதோஷம் மீண்டும் பற்றிக்கொண்டது. பஸ்ஸில் கூட்டத்தில் பிரயாணம் செய்யும்போது, மனதிற்குள் கவிதையை உருப்போட்டு வைத்து, பிறகு எழுதி நோட்டில் எழுதி வைப்பேன். இதற்கு வெண்பாமிகவும் வசதியாக இருந்தது. கொஞ்ச நாளில் ஒரு பழைய சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதி வந்துவிட்டது. பஸ்ஸில் யோசிப்பதைவிட சைக்கிளில் போகும் போது யோசிப்பது இன்னும் சற்று அனுகூலமாய் இருந்தது. இப்படியே எழுதியதில் நிறைய வெண்பாக்கள் சேர்ந்து விட்டன. ‘வளமான வாழ்விற்கு வழிகாட்டி’ என்ற தலைப்பில் வெண்பா கவிதையுடன் விளக்கவுரையும் சேர்த்து வெளியிட்டதில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “உன்னத வாழ்வுக்கு வழிகாட்டி”

Your email address will not be published. Required fields are marked *