Description
ஈரேழு நூற்றாண்டுகட்கு முன்னர் இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் போற்றி வளர்க்கப் பெற்ற இஸ்லாமிய நெறி, விரைவிலேயே உலகத்தின் பெரும் பகுதிகளிற் பரவியது. அண்ணல் பெருமானார் அவர்களின் மறைவுக்குப் பின்னர், கால் நூற்றாண்டிற்குள்ளாகவே இஸ்லாமிய நெறி தென்னகத்திற் காலூன்றிவிட்டதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அவ்வளவு பழங்காலத்திலேயே இந்நாட்டில் இஸ்லாமிய நெறி இடம் பெற்றிருந்தும், இன்றமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் மிகப்பிற்பட்டே உருவாகியுள்ளன. இதற்குரிய காரணங்கள் ஆய்ந்து நோக்குதற் குரியன. ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து தோன்றிய முந்நூற்றிற்கும் அதிகமான நூற்கள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.
Reviews
There are no reviews yet.