Skip to content Skip to footer

அன்னிபெசன்ட்

அலைகளை அள்ளி வீசும் ஆழிசூழ் ஆங்கில நாட்டில் தலைசிறந்ததாகிய இலண்டன் மாநகரத்தில் வில்லியம் உட் என்ற மருத்துவர் வாழ்ந்து வந்தார். அவர் எமிலி என்னும் எழில்மிகு நங்கையைத் தம் மனைவியாகப் பெற்றிருந்தார். எமிலியின் பெற்றோர் உடலில் ஓடியது அயர்லாந்து நாட்டின் குருதி. எனி னும் வாழ்க்கைக்கு வழி காண வேண்டி அவர்கள் இங்கிலாந்து நாட்டில் குடியேறினர்.

Additional information

Author

௬ லலிதாம்பாள்

Accession No

33389

Language

Tamil

Number Of Pages

114

Edition

First

Title_transliteration

Aṉṉipecaṉṭ

Publisher

வானதி பதிப்பகம்

Publishing Year

1967

Gener

Book

Categories: , Tags: , Product ID: 25481

Description

வில்லியம் உட்டின் மனம் மருத்துவப் பணியில் ஈடுபட்டது. அவர் செல்வத்தையோ செல்வாக்கையோ பெரிதெனக் கருதாமல் மக்களின் நோயைத் தீர்த்து அவர்களுடைய முகமலர்ச்சியைக்காணுதலே பேரின்பம் எனக் கருதினார். அவர் சிறந்த கல்விமான் ஆங்கிலத்தை மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஜெர்மனி, போர்த்துகீசியம் ஆகிய மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். கணக்கில் வல்லவர். தத்துவ ஞானம் படைத்தவர். தம் இல்லாள்மீது இணையற்ற அன்பு கொண்ட அவர் அவளும் அறிவில் சிறந்து விளங்க வேண்டும், தான் பெறும் இன்பத்தை அவளும் பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளையுடையவர். எனவே அவள் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது நல்ல நூல்களை உரக்கப் படித்து அவளையும் கேட்கச் செய்வார்.

 

அன்னிபெசன்ட் – [33389]

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்னிபெசன்ட்”

Your email address will not be published. Required fields are marked *